சீரடி சாயிபாபா

இவ்விணையப் பக்கம் என்னால் எழுதப்பட்டு வந்தாலும், எழுதச் சொன்னவர் அவரே! எழுதவைத்தவரும்   அவரே! அவர்தம் திருவடியில் சரண் புகுந்து அவர்தம் கருணையில் நனைந்து அவரின் ஆசீர்பாதத்தைத் தினமும் வேண்டும் அவர்தம் அடிமை.

ஞானவெட்டியான்

Main menu:


ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்

Meta

Archives

Categories

Tags

ஆன்மா உணர்வு குறிக்கோள் சரண் நம்பிக்கை வழிகாட்டி விழிப்பு

Recent Posts

Recent Comments

Religion Blogs - BlogCatalog Blog Directory

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

அகிலத்தோரே!

“ஒன்றே குலம். ஒருவனே தேவன்.
அன்பே சிவம்.
பசிக்கு உணவு. தாகத்துக்குத் தண்ணீர்.
இறைவனுக்குமுன் அனைத்து உயிர்களும் ஒன்றே.”

இத்தலையாய கொள்கைகளில் அசையா நம்பிக்கை வைத்து வாழ்ந்த ஒரு புண்ணிய ஆன்மாவின் வாழ்க்கை வரலாறு(கதைகள்), அவரின் கோட்பாடுகள், உபதேசங்கள் ஆகியன பற்றி அனைவரும் அறிந்துகொள்ள இவ்வலைப்பக்கத்தில் யாம் அறிந்தவற்றை இடலாமென்பதே எம் எண்ணம்.

இது நான் செய்யவில்லை.
இதை செய்வதும் அவரே!
இதன்மூலம் நமக்கு வழிகாட்டுபவரும் அவரே!

இறைவனை அடைய உள்ள வழிகளில் எளிதானது என்னும் பக்திவழியில் பயணிக்க “நம்பிக்கை” மிகவும் கட்டாயமான ஒன்று.
அது உள்ளவர்கள் இறைவனிடம் முழுவதுமாக சரண் அடைதலே தலையாய வழி.

ஓம் சாயிராம்.

Comments

Comment from Rajkumar
Time: 09/02/2010, 1:16 pm

அன்பு ஐயா,
வணக்கம், நீங்கள் எழுதிய அவ்வை ஞான குறள் விளக்கம் print out எடுத்து spiral bind செய்து வைத்துள்ளேன். எனக்கு குரு ஒருவர் கிடைத்தாலும் உபதேசம் இன்னும் கிடைக்கவில்லை. சாய் பாபா மீது சில நாட்களாக ஈடுபாடு கொண்டு தேடினால் உங்கள் மீது ஈடுபாடு கொண்டுள்ள எனக்கு உங்கள் மூலமே சாய் சரிதம் கிடைக்க வழி செய்துள்ளார் பாருங்கள். உங்களால் நிச்சயம் அற்புதமாக சாய் சரிதம் வழங்க முடியும்.
காத்திருக்கிறேன்.
நன்றி
ராஜ்குமார்

Comment from ஞானவெட்டியான்
Time: 09/02/2010, 3:38 pm

அன்புடையீர்,
நன்றி.
துவக்கிய சாயிபாபாவே எழுதி முடித்துத் தங்களுக்கு வழங்கிவிடுவார்.
நம்பினோர் கெடுவதில்லை.

Write a comment