சீரடி சாயிபாபா

இவ்விணையப் பக்கம் என்னால் எழுதப்பட்டு வந்தாலும், எழுதச் சொன்னவர் அவரே! எழுதவைத்தவரும்   அவரே! அவர்தம் திருவடியில் சரண் புகுந்து அவர்தம் கருணையில் நனைந்து அவரின் ஆசீர்பாதத்தைத் தினமும் வேண்டும் அவர்தம் அடிமை.

ஞானவெட்டியான்

Main menu:


ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்

Meta

Archives

Categories

Tags

Recent Posts

Recent Comments

Religion Blogs - BlogCatalog Blog Directory

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

முகவுரை – தொடர்ச்சி

குரு சாயி நாதரின் மகத்துவங்களைப் படித்ததாலும், அவரின் கொள்கைகள் மிகவும் எளிமையாக இருந்ததாலும் அவர்பால் கவரப்பட்டு இவ்விரண்டு ஆண்டுகளில் இரு முறை சீரடி சென்று வந்தேன். இம்முறை சென்றபொழுது ஆரத்தி முடிந்து வெளிவந்தபோது எவ்வகையிலாவது தொண்டு செய்யவேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கி நின்றது.

அன்றிரவு தங்குமிடத்தே உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு வந்தது. அதில் நான் பகவான் சாயி பாபாவின் சரித்திரத்தை ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது அருகில் வந்தவர்கள் எள்ளி நகையாடினார்கள். மனம் தளர்ந்தேன்.

அதிகாலை எழுந்து தேநீர் அருந்தக் கடைக்குச் சென்றேன். அப்பொழுது அங்கிருந்தவர்களில் ஒரு பெரியவர் அழகான தமிழில், “நான் சொல்வதில் நம்பிக்கை வை. கிண்டலுக்கு அஞ்சாமல் நினத்ததைச் செய்” என்றார். அவர் சொன்னது எனக்குத்தான் என்று ஓரிரு நிமிடங்களுக்குப்பின்தான் எனக்கு உறைத்தது. திரும்பிப் பார்த்தேன். அங்கிருந்தவர்களில் தமிழில் பேசியது யார் எனக் கேட்டேன். அப்படி இங்கு யாரும் இல்லை; தமிழிலும் பேசவில்லை என்றனர். அதிர்ச்சியுடன் அங்கிருந்த பலகையில் அமர்ந்தேன். அருகிலிருந்தோர் என்ன என வினவ, நடந்தவற்றைக் கூறினேன். அவர்கள், “நீங்கள் நினைத்தபடி பாபாவின் சரித்திரத்தை தமிழில் எழுதுங்கள். இதுதான் பாபாவின் உத்தரவு” என்றனர்.

பாபாவின் சரித்திரத்த எழுத எனக்கு அருகதையுள்ளதா? என எண்ணிப் பார்த்தேன்.

அப்படியே எழுதினாலும் அது:
“பாம்பைப் பார்த்து மண்புழுதானும் ஆடமுயன்றது”
போல்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இருப்பினும்:

“கல்லாத மூடன் கவிதை மொழியறியேன்
சொல்லால் தொடங்குகிறேன்…..”(தொழுகைநாமா)

“சிற்றடியானும் சொற்ற கவிகளின்
முற்றும் பிழை களிருந் திடினும்
கற்றவர்க ளிதை குற்ற மகற்றியே
பற்றுதலாகப் படிப்பீரே”(சுகிர்த மெய்ஞான சங்கீர்த்தனம்)

எனக்கூறி அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன், ஞான சத் குரு சாயி பாபாவின் சீரடி பற்றித் தொழுது வணங்கி என் கடமையைச் செய்ய முயலுகிறேன்.

இல்லை! இல்லை!
செய்யச் சொன்னவரும் அவரே!
செய்பவரும் அவரே! எல்லாம் அவரே!

Comments

Comment from வையம்
Time: 13/09/2009, 7:13 am

Comment from siva
Time: 17/07/2010, 4:22 pm

//சரித்திரத்தை ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது அருகில் வந்தவர்கள் எள்ளி நகையாடினார்கள். மனம் தளர்ந்தேன். //

பரவாயில்லைங்க… மஞ்சள் துணியை தலைக்கு கட்டியவர் சொன்னதாலே தப்பிச்சீங்க… புண்ணியமா போகுது…

இதே மஞ்ச துணியை தோளில் போர்த்தியவர் சொல்லியிருந்தா உங்க கதி என்னாவது… :)

Comment from ஞானவெட்டியான்
Time: 24/07/2010, 3:18 pm

துணியில் என்ன உள்ளது; எல்லாமே மனத்தில்தான். மனம் மஞ்சளானால் மஞ்சள் காமாலைதான்.

Comment from kumaresan
Time: 10/08/2010, 2:53 pm

ஐயா, உங்களுடைய இணைய தளத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

உங்கள் பணி சிறப்பாக உள்ளது. உங்களுடைய இணைய தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவேன்.

நன்றி

குமரேசன்
காரைக்கால்

Comment from ஞானவெட்டியான்
Time: 10/08/2010, 3:31 pm

அன்பு குமரேசன்,
நன்றி

Write a comment