<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>shridisaibaba.com</title>
	<atom:link href="http://shridisaibaba.siththan.com/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://shridisaibaba.siththan.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 31 Jan 2010 23:53:35 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>முகவுரை &#8211; தொடர்ச்சி</title>
		<link>http://shridisaibaba.siththan.com/archives/19</link>
		<comments>http://shridisaibaba.siththan.com/archives/19#comments</comments>
		<pubDate>Sun, 13 Sep 2009 06:49:04 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[சீரடி சாயி பாபா]]></category>
		<category><![CDATA[முகவுரை]]></category>

		<guid isPermaLink="false">http://shridisaibaba.siththan.com/?p=19</guid>
		<description><![CDATA[குரு சாயி நாதரின் மகத்துவங்களைப் படித்ததாலும், அவரின் கொள்கைகள் மிகவும் எளிமையாக இருந்ததாலும் அவர்பால் கவரப்பட்டு இவ்விரண்டு ஆண்டுகளில் இரு முறை சீரடி சென்று வந்தேன். இம்முறை சென்றபொழுது ஆரத்தி முடிந்து வெளிவந்தபோது எவ்வகையிலாவது தொண்டு செய்யவேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கி நின்றது. 
அன்றிரவு தங்குமிடத்தே உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு வந்தது. அதில் நான் பகவான் சாயி பாபாவின் சரித்திரத்தை ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது அருகில் வந்தவர்கள் எள்ளி நகையாடினார்கள். மனம் தளர்ந்தேன். 
அதிகாலை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>குரு சாயி நாதரின் மகத்துவங்களைப் படித்ததாலும், அவரின் கொள்கைகள் மிகவும் எளிமையாக இருந்ததாலும் அவர்பால் கவரப்பட்டு இவ்விரண்டு ஆண்டுகளில் இரு முறை சீரடி சென்று வந்தேன். இம்முறை சென்றபொழுது ஆரத்தி முடிந்து வெளிவந்தபோது எவ்வகையிலாவது தொண்டு செய்யவேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கி நின்றது. </p>
<p>அன்றிரவு தங்குமிடத்தே உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு வந்தது. அதில் நான் பகவான் சாயி பாபாவின் சரித்திரத்தை ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது அருகில் வந்தவர்கள் எள்ளி நகையாடினார்கள். மனம் தளர்ந்தேன். </p>
<p>அதிகாலை எழுந்து தேநீர் அருந்தக் கடைக்குச் சென்றேன். அப்பொழுது அங்கிருந்தவர்களில் ஒரு பெரியவர் அழகான தமிழில், &#8220;நான் சொல்வதில் நம்பிக்கை வை. கிண்டலுக்கு அஞ்சாமல் நினத்ததைச் செய்&#8221; என்றார். அவர் சொன்னது எனக்குத்தான் என்று ஓரிரு நிமிடங்களுக்குப்பின்தான் எனக்கு உறைத்தது. திரும்பிப் பார்த்தேன். அங்கிருந்தவர்களில் தமிழில் பேசியது யார் எனக் கேட்டேன். அப்படி இங்கு யாரும் இல்லை; தமிழிலும் பேசவில்லை என்றனர். அதிர்ச்சியுடன் அங்கிருந்த பலகையில் அமர்ந்தேன். அருகிலிருந்தோர் என்ன என வினவ, நடந்தவற்றைக் கூறினேன். அவர்கள், &#8220;நீங்கள் நினைத்தபடி பாபாவின் சரித்திரத்தை தமிழில் எழுதுங்கள். இதுதான் பாபாவின் உத்தரவு&#8221; என்றனர்.</p>
<p>பாபாவின் சரித்திரத்த எழுத எனக்கு அருகதையுள்ளதா? என எண்ணிப் பார்த்தேன்.</p>
<p>அப்படியே எழுதினாலும் அது:<br />
&#8220;பாம்பைப் பார்த்து மண்புழுதானும் ஆடமுயன்றது&#8221;<br />
போல்தான் இருக்கும் என நினைக்கிறேன்.</p>
<p>இருப்பினும்:</p>
<p>&#8220;கல்லாத மூடன் கவிதை மொழியறியேன்<br />
சொல்லால் தொடங்குகிறேன்&#8230;..&#8221;(தொழுகைநாமா)</p>
<p>&#8220;சிற்றடியானும் சொற்ற கவிகளின்<br />
முற்றும் பிழை களிருந் திடினும்<br />
கற்றவர்க ளிதை குற்ற மகற்றியே<br />
பற்றுதலாகப் படிப்பீரே&#8221;(சுகிர்த மெய்ஞான சங்கீர்த்தனம்)</p>
<p>எனக்கூறி அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன், ஞான சத் குரு சாயி பாபாவின் சீரடி பற்றித் தொழுது வணங்கி என் கடமையைச் செய்ய முயலுகிறேன்.</p>
<p>இல்லை! இல்லை!<br />
செய்யச் சொன்னவரும் அவரே!<br />
செய்பவரும் அவரே! எல்லாம் அவரே!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shridisaibaba.siththan.com/archives/19/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>யார் அவர்?</title>
		<link>http://shridisaibaba.siththan.com/archives/17</link>
		<comments>http://shridisaibaba.siththan.com/archives/17#comments</comments>
		<pubDate>Sun, 06 Sep 2009 13:36:24 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[சீரடி சாயி பாபா]]></category>
		<category><![CDATA[முகவுரை]]></category>
		<category><![CDATA[ஆன்மா]]></category>
		<category><![CDATA[உணர்வு]]></category>
		<category><![CDATA[குறிக்கோள்]]></category>
		<category><![CDATA[வழிகாட்டி]]></category>
		<category><![CDATA[விழிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://shridisaibaba.siththan.com/?p=17</guid>
		<description><![CDATA[இறையருள் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் மகத்துக்களாகிய மகான்களின் ஆன்மாவைப் பற்றியும் அவர்களின் பெருமைக்குறிய சிறப்புகளையும் பேசவோ, எழுதவோ அல்லது அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி சிந்திக்கவோ இயலும். இது இறுதியில் ஆன்ம சுத்திக்கும், ஆன்ம விழிப்புக்கும் இறை உணர்வுக்கும் இட்டுச் செல்லும்.
யார் அவர்?
***********
சீரடி சாயி பாபாவை சரண் அடைந்தோருக்கு:
அவர்தான் அனைத்து உயிர்களின் ஆன்மா.
அவரே நமக்குள் எப்பொழுதும் நிரந்தரமாய் ஓடிக்கொண்டிருக்கும் மின்காந்த உணர்வு அலைகள்.
அவரே இறப்பற்ற உண்மை நிலை. ஒவ்வொரு ஆன்மாவிலும் பரவியுள்ளார்.
அவரே எப்பொழுதும் மங்காத ஒளி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இறையருள் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் மகத்துக்களாகிய மகான்களின் ஆன்மாவைப் பற்றியும் அவர்களின் பெருமைக்குறிய சிறப்புகளையும் பேசவோ, எழுதவோ அல்லது அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி சிந்திக்கவோ இயலும். இது இறுதியில் ஆன்ம சுத்திக்கும், ஆன்ம விழிப்புக்கும் இறை உணர்வுக்கும் இட்டுச் செல்லும்.</p>
<p>யார் அவர்?<br />
***********</p>
<p>சீரடி சாயி பாபாவை சரண் அடைந்தோருக்கு:</p>
<p>அவர்தான் அனைத்து உயிர்களின் ஆன்மா.<br />
அவரே நமக்குள் எப்பொழுதும் நிரந்தரமாய் ஓடிக்கொண்டிருக்கும் மின்காந்த உணர்வு அலைகள்.<br />
அவரே இறப்பற்ற உண்மை நிலை. ஒவ்வொரு ஆன்மாவிலும் பரவியுள்ளார்.<br />
அவரே எப்பொழுதும் மங்காத ஒளி வீசும் உண்மையாம் அருள் விளக்கு.<br />
அவரே ஒவ்வொரு ஆன்மாவின் குறிக்கோளை அடைய இணையற்ற வழிகாட்டி.<br />
அவரே குறிக்கோள்.<br />
அவரே எல்லாம். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shridisaibaba.siththan.com/archives/17/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அகிலத்தோரே!</title>
		<link>http://shridisaibaba.siththan.com/archives/1</link>
		<comments>http://shridisaibaba.siththan.com/archives/1#comments</comments>
		<pubDate>Wed, 02 Sep 2009 05:16:36 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[சீரடி சாயி பாபா]]></category>
		<category><![CDATA[முகவுரை]]></category>
		<category><![CDATA[சரண்]]></category>
		<category><![CDATA[நம்பிக்கை]]></category>

		<guid isPermaLink="false">http://shridisaibaba.siththan.com/?p=1</guid>
		<description><![CDATA[&#8220;ஒன்றே குலம். ஒருவனே தேவன்.
அன்பே சிவம்.
பசிக்கு உணவு. தாகத்துக்குத் தண்ணீர்.
இறைவனுக்குமுன் அனைத்து உயிர்களும் ஒன்றே.&#8221;
இத்தலையாய கொள்கைகளில் அசையா நம்பிக்கை வைத்து வாழ்ந்த ஒரு புண்ணிய ஆன்மாவின் வாழ்க்கை வரலாறு(கதைகள்), அவரின் கோட்பாடுகள், உபதேசங்கள் ஆகியன பற்றி அனைவரும் அறிந்துகொள்ள இவ்வலைப்பக்கத்தில் யாம் அறிந்தவற்றை இடலாமென்பதே எம் எண்ணம்.
இது நான் செய்யவில்லை.
இதை செய்வதும் அவரே!
இதன்மூலம் நமக்கு வழிகாட்டுபவரும் அவரே!
இறைவனை அடைய உள்ள வழிகளில் எளிதானது என்னும் பக்திவழியில் பயணிக்க &#8220;நம்பிக்கை&#8221; மிகவும் கட்டாயமான ஒன்று.
அது உள்ளவர்கள் இறைவனிடம் முழுவதுமாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;ஒன்றே குலம். ஒருவனே தேவன்.<br />
அன்பே சிவம்.<br />
பசிக்கு உணவு. தாகத்துக்குத் தண்ணீர்.<br />
இறைவனுக்குமுன் அனைத்து உயிர்களும் ஒன்றே.&#8221;</p>
<p>இத்தலையாய கொள்கைகளில் அசையா நம்பிக்கை வைத்து வாழ்ந்த ஒரு புண்ணிய ஆன்மாவின் வாழ்க்கை வரலாறு(கதைகள்), அவரின் கோட்பாடுகள், உபதேசங்கள் ஆகியன பற்றி அனைவரும் அறிந்துகொள்ள இவ்வலைப்பக்கத்தில் யாம் அறிந்தவற்றை இடலாமென்பதே எம் எண்ணம்.</p>
<p>இது நான் செய்யவில்லை.<br />
இதை செய்வதும் அவரே!<br />
இதன்மூலம் நமக்கு வழிகாட்டுபவரும் அவரே!</p>
<p>இறைவனை அடைய உள்ள வழிகளில் எளிதானது என்னும் பக்திவழியில் பயணிக்க &#8220;நம்பிக்கை&#8221; மிகவும் கட்டாயமான ஒன்று.<br />
அது உள்ளவர்கள் இறைவனிடம் முழுவதுமாக சரண் அடைதலே தலையாய வழி.</p>
<p>ஓம் சாயிராம். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shridisaibaba.siththan.com/archives/1/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
	</channel>
</rss>
